கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள், அஞ்சலி கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்க, மாநகரில் விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சோதனைகளுக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்
கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு விஸ்வ இந்து பரிசத் அமைப்பு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் பேரூரில் 23வது நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு பேரூர் படித்துரையில் வைத்து திதி கொடுக்கப்பட்டது.
Be First to Comment