கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்திய வீடுகளில் வசிப்போருக்கு, தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா என, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், நேற்று ஆய்வு செய்தார்.
காளப்பட்டி, 34வது வார்டு, நேரு நகர் கிழக்குப்பகுதி, இளங்கோ நகரில் தனிமைப்படுத்திய வீடு, 33வது வார்டு பிள்ளையார் கோவில் வீதியில் தனிமைப்படுத்திய வீடுகளில், ஆய்வு மேற்கொண்ட கமிஷனர், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா என கேட்டறிந்தார்.தனிமைப்படுத்திய காலம் முடியும் வரை, யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, அங்கு வசிப்போரிடம் கேட்டுக் கொண்டார்.வீட்டில் உள்ள அனைவரும், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். காலை, மாலை என இருவேளையும் கிருமிநாசினியால், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என, அவர் அறிவுறுத்தினார்.சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவை சரிபார்ப்பதை ஆய்வு செய்தார்.அப்போது, மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்

வீட்டிலேயே இருங்கள் -மாநகராட்சி கமிஷனர் குமரவேல் பாண்டியன்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment